தர்க்கா நகர் சம்பவத்திற்கு முழுமையான காரணம் அமைச்சர் பாட்டளி சம்பிக்கவே

அமைச்சர் பாட்டளி சம்பிக்க தான் தர்க்கா நகர் சம்பவத்தை முழுமையாக அரங்கேற்றியவர் என தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.

தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம், இன்று - 07- கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆட்சியின் போது, தர்க்கா நகர் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, மதஸ்த்தளங்கள் உடைக்கப்பட்டது என அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், குறித்த சம்பவத்திற்கு முற்றிலும் முன்னின்று செயலாற்றியது தற்போதைய அமைச்சர் சம்பிக்க என்றும், இதற்கும் பொதுபல சேனா அமைப்பிற்கும் எந்த வித தொடர்பும் இல்லையென அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சம்பிக்க தனது இருப்பை காப்பாற்றிக் கொள்வதற்காக தயாராகி வருவதாக வசந்த பண்டார குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தமையானது, சர்வதேச சூழ்ச்சியின் மூலமே என அவர் கூறியுள்ளார்.

அத்துடன், ஆட்சியில் இருக்கும் இந்த அரசாங்கம், நாட்டில் சிறுபான்மையினரின் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக சர்வதேசத்தின் உதவியை நாடி செயற்பட்டது எனவும், தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.jaffnamuslim
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -