புதிய தொகுதி அமைப்பாளர்கள் 11 பேர் நியமனம் - இருவரின் பதவிகள் பறிப்பு

புதிய தொகுதி அமைப்பாளர்கள் 11 பேருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செலயகத்தில் இன்று நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

கம்பஹா மாவட்டத்தின் புதிய அமைப்பாளராக முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் பேரனான பிரதீப் ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மாவட்ட இணை அமைப்பாளர்களாக மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் காமினி டி சில்வா மற்றும் புத்திக்க இந்தமல்கொட ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். களுத்துறை மாவட்டத்தின் அமைப்பாளராக மனுல சமல் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

காலி மாவட்டத்தின் அமைப்பாளராக பிஹல் தர்ஷன குருகேவும் கேகாலை மாவட்டத்தின் அமைப்பாளராக நலின் புஷ்பகுமாரவும் குருணாகல் மாவட்ட அமைப்பாளராக துஷார திலகரட்ணவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சாலிந்த திஸாநாயக்க தொகுதி அமைப்பாளராக செயற்பட்ட ஹிரியால தொகுதியின் புதிய அமைப்பாளராக வடமேல் மாகாண சபை உறுப்பினர் கமல் இந்திக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

கீதா குமாரசிங்ஹ தொகுதி அமைப்பாளராக செயற்பட்ட பெந்தர எல்பிட்டிய தொகுதிக்கான இணை அமைப்பாளர்களாக பெந்தோட்டை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் கயான் கிருஷான் ஸ்ரீமான்ன மற்றும் எல்பிட்டிய பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அமில ஹர்ஷன காரியவசம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -