நாளை தெற்கு அதிவேகப் பாதையில் இலவசமாக பயணிக்கலாம்..!

தெற்கு அதிவேக வீதியில் நாளை காலை 6.00 மணிமுதல் நள்ளிரவு 12.00 மணி வரையான காலப்பகுதியில் இலவசமாக வாகனங்கள் பயணிக்க முடியும் என வீதிப் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

நாளை தொழிலாளர் தினத்தை முன்னிட்டு குறித்த காலப்பகுதியில் அந்த வீதி வழியாக பயணிக்கும் வாகனங்களுக்கு கட்டணங்கள் அறவிடப்பட மாட்டாது எனவும் நாளை மே தினத்தை முன்னிட்டு தெற்கு அதிவேக வீதியில் விஷேட போக்குவரத்து திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுஎனவும் அந்த சபை தெரிவித்துள்ளது.

நாளைய தினம் அதிக வாகனங்கள் இந்த வீதியால் பயணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் வழமையான வெளியேறும் கதவுகளுக்கு மேலதிகமான கதவுகளை இணைத்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -