திறப்பனையில் மூவர் சுட்டுக்கொலை – சடலங்கள் வாகனத்தில்

திறப்பனை துருவில பிரதேசத்தில் மூன்று நபர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இன்று பிற்பகல் 3 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்திலேயே குறித்த மூவரும் உயிரிழந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஹிந்தோகம வீதியின் துருவில பிரதேசத்தில் குறித்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சிற்றூந்து ஒன்றில் குறித்த சடலங்கள் மூன்றும் காணப்படுவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்

மேலும், சந்தேக நபர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் தெரியவரவில்லை. 

சம்பவம் தொடர்பில் திறப்பனை காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -