எமது தலைவருக்காக இன்று ஆரம்பிக்கிறேன்..!

ல்லாம் வல்ல இறைவனை போற்றுகின்றேன் யாழ் நகருக்கு விஜயமொன்றை மேற்கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் சுபகு தொழுகையின் பின் யாழ் முஸ்லிம் சொந்தங்களை அவர்களது துன்பங்களை பார்க்க தனிமையில் சென்றது எனக்கு ஆச்சரியத்தையும் பயத்தையும் எழுப்பியுள்ளது.

இரண்டு வருடங்கள் என் கவி எழுத்துக்களை நிறுத்தி வைத்த நான் மீண்டும் எமது தலைவருக்காக இன்று ஆரம்பிக்கிறேன்.

தலைவன் 
/////////////////////

எட்டாத உயரத்தில் மேகம் 
இருந்தும் 
ஏற்றத் தாழ்வின்றி மண்மேலே தூவும்

வற்றாத நதியாக ஓடும்
சுற்றி 
இருக்கின்ற குழி கூட 
குளமாக மாறும்

எட்டொன்று வைத்தால் 
கல்லொன்று வைப்பாய்
தகரத்து கொட்டில்கள் 
தரம் மாற்றிக் கொடுப்பாய்

பகையோர் முன் கொதிப்பாய்
பசி நிறைந்தோரை அணைப்பாய் 
பாதி - இருள்கூட உறங்காமல் 
உன் சேவை தொடர்ந்தாய்

கோடிகள் கூடி இருந்தும் 
காவலாளிகள் கூட இருந்தும் 
தேடியே ஓடி வந்தான் 
தேவை அறியவே யாழ் நுழைந்தான்

தோட்டாக்கள் தலை சூழ 
நெஞ்சை முழுதாக இறையால 
அதி காலை எம் காளை
யாழில் பத்தித்தானே 
தன் காலை 
என்றும் தொடரட்டும் 
உன் சேவை

( அன்புடன் கவிஞர் அப்துல் ரஹீம் )
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -