மூன்று வீடுகளில் கைவரிசையை காட்டிய பெண் சிக்கினார்...!

க.கிஷாந்தன்-
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மூன்று வீடுகளில் ஆடைகள் உட்பட பல பொருட்களை களவாடிய பெண் ஒருவரை பொலிஸார் 29.04.2016 அன்று மாலை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் ரதல்ல தோட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது. இத்தோட்டத்தை சேர்ந்த குறித்த பெண் தொடர்ந்தும் இவ்வாறான களவாடும் சம்பவங்களில் ஈடுப்பட்டு வந்ததாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தொடர்ந்து இவ்வாறு களவாடிய மேற்படி பெண் 29.04.2016 அன்று மாலையும் மேற்படி தோட்டத்தில் தொழிலாளர்களின் குடியிருப்பில் நுழைந்து தனது கைவரிசையை காட்டியுள்ளார்.

இதனை அறிந்த பொதுமக்கள் உடனே நானுஓயா பொலிஸாருக்கு தகவலை வழங்கியதையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் இப்பெண்ணை சந்தேகத்தின் பேரில் கைது செய்து பொலிஸ் விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணை 30.04.2016 அன்று மாலை நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -