சிரேஸ்ட ஊடகவியலாளர் விபத்தில் காயம் : வைத்தியசாலையில் அனுமதி

எப்.முபாரக்-
திருகோணமலையில் இன்று வெள்ளிக்கிழமை (22) ஏற்பட்ட விபத்தொன்றில் திருகோணமலை சிரேஸ்ட ஊடகவியலாளர் அரசரத்தினம் அச்சுதன் வயது (36) காயங்களுக்குள்ளாகி திருகோணமலை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காந்திநகர் சந்தியில்  முச்சக்கரவண்டியொன்று குறித்த ஊடகவியலாளரின் மோட்டார் சைக்கிளில் மோதுண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

தம்பலாகமம் பிரதேசத்திற்குச் சென்று செய்தி சேகரித்து விட்டு வரும் வழியிலே விபத்து நடைபெற்றுள்ளது. குறித்த முச்சக்கரவண்டியின் சாரதியை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும்,உப்புவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -