ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ”தேர்தல் மறுசீரமைப்பு ஆலோசனைகள்” தொடர்பிலான செயலமர்வு..!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டில் ”தேர்தல் மறுசீரமைப்பு ஆலோசனைகள்” எனும் தலைபிலான துறைசார் செயலமர்வு எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பு 7, பிலிப் குணவர்தன மாவத்தை இலக்கம் 9 இல் அமைந்துள்ள விளையாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெறவுள்ள இச்செயலமர்வில் தேர்தல் மறுசீரமைப்பு ஆலோசனைகள் தொடர்பான செயற்பாடுகளை வழிநடாத்தும் துறைசார்ந்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அறிஞர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இச்செயலமர்வில் கலந்து கொள்ள கட்சியின் உயர்பீட உறுப்பினர்களும் மக்கள் பிரதிநிதி சபை உறுப்பினர்களும் மற்றும் துறைசார் புத்திஜிவிகளும் ஆர்வமுள்ளவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -