மறக்கமுடியாத பிறந்தநாள் பரிசு கொடுத்த மனிதர் - இவரை வாழ்த்தியே ஆகவேண்டும்

எஸ்.என்.றிஸ்லி-
ன்று 29.04.2016 மதியம் எனது பிள்ளைகளைப் பாடசாலையிலிருந்து வீட்டுக்கு ஏற்றிச் சென்று கொண்டிருக்கையில் பண்டாரிகுளம் வீதியில் ஒரு தொகைப் பணத்துடன் பணப்பை ஒன்றைக் கண்டெடுத்தேன். 

அதனுள் இருந்த அடையாளஅட்டை விபரப்படி - இன்று தனது 33வது பிறந்தநாளைக் கொண்டாடும் முகமறியாத நண்பர் "யோகராஜா நிரஞ்சன்" என்பவருடையது என அறிகிறேன். உரியவரைத் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். 

அன்புடன் ...N.K. கஜரூபன் 

என தனது முகநூலில் பதிவேற்றம் செய்து சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் கண்டு உரியவரிடம் கண்டெடுத்த பணப்பையை ஒப்படைத்தார் N.K. கஜரூபன். 

மேலும் இது குறித்து தனது முகநூலில் இவ்வாரு தெரிவித்துள்ளார்...

நான்பணிபுரியும் வவுனியா நீதவான் நீதிமன்றில் வைத்து கண்டெடுத்த பணத்தையும் , அடையாள அட்டையையும் உரியவரிடம் ஒப்படைத்தேன்.

எனது முகப்புத்தக நண்பர் ஒருவரின் நண்பர் திரு.யோகராஜா நிரஞ்சன். 

அவர்களின் வீட்டுக்குச் சென்று விடயத்தைக் கூறி அவரை என்னிடம் வழிப்படுத்தியிருந்தார். அவருக்கும், உரியவரிடம் அவரது பொருளை ஒப்படைப்பதற்கு வசதியாக இச் செய்தியைப் பகிர்ந்த அத்தனை உறவுகளுக்கும், ஆர்வத்துடன் தொலைபேசியில் அழைத்து, என்னை வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கும், என்னை நல்லவனாக பெற்ற என் பெற்றோருக்கும் , சிறுவயதுமுதல் என்னை வழிப்படுத்திய கம்பவாரிதி ஜெயராஜ் அண்ணாவுக்கும் கோடானுகோடி நன்றிகள்.. என பதிவிட்டுள்ளார்.

இவரின் செயலை நாமும் வாழ்த்துவோம்.

ஒரு முன் மாதிரிக்காக இதனை அதிகம் பகிர்ந்து இவரை போன்று இன்னும் பலர் உருவாக முயற்சிப்போம்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -