ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவினால் இஸ்லாமிய நிலையத் திறப்பு விழா..!

இக்பால் அலி-
மாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவினால் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் சிறுக்குளம் மீள்குடியேற்றப் பட்ட பிரதேசத்தில் இஸ்லாமிய நிலையத் திறப்பு விழா 22-04-2016 ஜும்ஆத் தொழுகையுடன் நடைபெறவுள்ளதாக என்று ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுச் செயலாளர் ஏ.எல்.கலிலுர்ரஹ்மான் தெரிவித்தார்.

ஜமாஅத்தின் சமூக சேவைத் தொடரின் கீழ் மன்னார் சிலாவத்துரை, அளவக்கை சிறுக்குளம் மீள்குடியேற்றப்பட்ட கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஜும்ஆப் பள்ளிவாசல், அல்குர்ஆன் மத்ரஸா, கடைத்தொகுதி, இமாமுக்கான வீடு, நீர் விநியோகம் உள்ளடங்கிய கட்டிடத் தொகுதி திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுத் தலைவர் என்.பீ,எம்.அபூபக்கர் சித்தீக் மதனி பிரதம அதிதியாக கலந்து கொண்டு கலந்து கொண்டு திறந்து வைக்கவுள்ளார்.

இந்நிகழ்வில் அஷ்ஷய்க் எம். எஸ். எம். இம்தியாஸ் குத்பா பேருரையையும் அஷ்ஷய்க் எஸ். எம். ஜுனைத் மதனி வரவேற்புரையையும் அஷ்ஷய்க் எம். எச்.முயினுதீன் நளீமி நன்றியுரையையும் நிகழ்த்தவுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -