அரசுக்கு எதிரான கருத்துக்களை சமூகமயப்படுத்த வேண்டாம் - ஜனாதிபதி

ரசாங்கத்திற்கு எதிராக கருத்துக்களை சமூகமயப்படுத்த வேண்டாம் என தான் இரண்டு தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த இரண்டு தொலைக்காட்சிகளும் மக்கள் மத்தியில் அரசாங்கத்திற்கு எதிரான நிலைப்பாடுகளை ஏற்படுத்த திட்டமிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கடந்த காலம் முழுவதும் தான் இது குறித்து ஆராய்ந்து வந்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்களே கடந்துள்ளன. இப்படி நடந்து கொள்ள வேண்டாம் என தான் தொலைக்காட்சிகளின் உரிமையாளர்களிடம் கூறியதாகவும் ஜனாதிபதி அமைச்சரவையில் தெரிவித்துள்ளார்.

வழங்கப்பட்டுள்ள ஊடக சுதந்திரத்தை மக்களின் தேவைகளுக்காக பயன்படுத்த ஊடகங்கள் அறிந்து கொள்ள வேண்டும் எனவும் தான் தொலைக்காட்சி உரிமையாளர்களிடம் தெரிவித்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -