மஹிந்தைக்காக பதவி விலகப்போகும் அமைச்சர் தயாசிறி..!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மே தினக்கூட்டத்திற்கு சென்றால் தான் பதவி விலகுவேன் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அயல்நாடொன்றில் உதவியுடன், ஐக்கிய தேசியக் கட்சிக்காக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிரிக்கும் சதி முயற்சியொன்றில் ஈடுபட்டுள்ளார் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, தெரிவித்துள்ளார்.

கொழும்பு, டாலி வீதியில் அமைந்துள்ள சு.க.வின் கட்சித் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்

மஹிந்த ராஜபக்ஷ மீது நாம் அன்பு கொண்டுள்ளோம். அதனாலேயே, பசில் ராஜபக்ஷவின் சதித் திட்டத்துக்குள் மூழ்கி ஏமாற்றமடைய வேண்டாம் என்று மஹிந்தவுக்கு கூறுகின்றோம். அவர், சு.க.வின் காலி மேதினக் கூட்டத்துக்கு வந்தால், நான் அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவேன்’ என்றார்.

இதேவேளை, காமினி திசாநாயக்கவின் காலத்திலும், ஐக்கிய தேசியக் கட்சியை அதிகாரத்துக்கு கொண்டுவர, பசில் ராஜபக்ஷ பாடுபட்டார். தற்போதும் அவர் அதனையே செய்கிறார். காசைக் கொடுத்து சு.க.வைப் பிரிக்கும் சதி முயற்சியில் பசில் ஈடுபட்டுள்ளார்’ என அமைச்சர் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -