காலியில் உள்ள கடற்படைத் தளம் அம்பாந்தோட்டைக்கு மாற்றம்..!

லங்கை கடற்படையின் தென்பிராந்தியத் தலைமையகம், அம்பாந்தோட்டைக்கு மாற்றப்படவுள்ளதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தகவல் வெளியிட்டுள்ளார்.

இலங்கை கடற்படையின் தென் பிராந்தியத் தலைமையகம், காலி துறைமுகப் பகுதியில்- எஸ்.எல்.என்.எஸ். தக்சிண என்ற பெயரில்இயங்கி வருகிறது.

இந்த கடற்படைத் தளமே, அம்பாந்தோட்டைக்கு மாற்றப்படவுள்ளதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரி்வித்துள்ளார்.

பீஜிங்கில் நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

அம்பாந்தோட்டைத் துறைமுகப் பிரதேசத்தை அண்டி, சீனாவின் முதலீடுகள் இடம்பெறவுள்ள நிலையிலேயே இந்த மாற்றம் இடம்பெறவுள்ளது.

அம்பாந்தோட்டைத் துறைமுகப் பகுதியை சீனா தன் வசம் எடுத்துக் கொள்ளவுள்ளதாக தகவல்கள் பரவுவதைத் தடுக்கும் நோக்கில், இலங்கையின் பாரிய கடற்படைத் தளம் அங்கிருப்பதை உறுதிப்படுத்தவே இந்த மாற்றம் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -