இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் மட்டக்களப்பில் வாசிகசாலைக்கான அடிக்கல் நட்டிவைப்பு..!

ட்டக்களப்பு கெம்பஸில் அமைக்கப்படவிருக்கின்ற இலங்கையின் மிகப்பிரமான்டமான அதி நவீன வசதிகளுடன் கூடிய வாசிகசலைக்கான அடிக்கல் மீள்குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு கெம்பஸின் தலைவருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வினால் இன்று நட்டிவைக்கப்பட்டது. 

365 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள மேற்படி வாசிகசாலையில் சுமார் 3000 மாணவர்கள் இருந்து தங்களுடைய நூலக வசதிகளை, புதிய தொழில் நுட்பத்திற்கமைவாக சர்வதேச பல்கலைக்கழகங்களோடு இணைந்து படிக்கக் கூடிய வகையில் அமைக்கப்படவுள்ளது. 

இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கருத்துத் தெரிவிக்கையில், 

"சுமார் 18 மாதங்களுக்குள் இந்த வாசிகசாலை கட்டி முடித்து மாணவர்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த வாசிகசாலை அமைக்கப்பட்டதும் இலங்கையிலேயே அதி கூடிய மாணவர்கள் ஒரே நேரத்தில் கல்வி கற்கக் கூடிய நவீன தொழில்நுட்பத்தோடு கூடிய ஒரு வாசிகசாலையாக இது திகழும்'' என்றார். 

இந்நிகழ்வில் மட்டக்களப்பு கெம்பஸினுடைய முகாமைத்துவப்பணிப்பாளர் பொறியியலாளர் ஹிறாஸ் ஹிஸ்புல்லாஹ் , ஆளுனர் சபை உறுப்பினர் டாக்டர் பிரபாத் உக்குவத்த மற்றும் பொறியியலாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -