எதிர்க்கட்சி தலைவருக்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கை..!

எம்.வை.அமீர்,எஸ்.அஷ்ரப்கான்-
டக்கு கிழக்கை இணைப்பதற்கு முயற்சிக்கும் எதிர் கட்சித்தலைவர் ஆர் சம்பந்தனின் அண்மைக்கால சட்டவிரோத நடவடிக்கைகளை கண்டிக்கு முகமாக உலமா கட்சி தலைமையில் பல சிங்கள கட்சிகள் ஒன்றிணைந்து சம்பந்தனின் கொழும்பு இல்லத்தின் முன்பாக 2016-04-27ஆம் திகதி சத்தியக்கிரகத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது உலமா கட்சித்தலைவர் கலாநிதி முபாறக் மௌலவி கூறியதாவது,

வடக்கையும் கிழக்கையும் நீதி மன்றம் பிரித்திருககும் போது அவற்றை மீண்டும் இணைப்பதே எமது இலக்கு என சம்பந்தன் சொல்வது சட்டத்தை அவமதிக்கும் செயலாகும். திரு. சம்பந்தன் அவர்கள் பாராளுமன்றத்தில் எதிர் கட்சித்தலைவராக இருக்கிறார். அவர் தமிழ் மக்களுக்கு மட்டுமான எதிர் கட்சித்தலைவரல்ல, முழு நாட்டுக்குமான எதிர் கட்சித்தலைவராகும். ஆனாலும் அவர் எதிர் கட்சித்தலைவர் என்ற தனது கடமையை சரிவர செய்கிறாரா என்றால் அதனைக்காண முடியவில்லை.

இன்று மக்கள் பல கஷ்டங்களுக்கு முகம் கொடுக்கிறார்கள். விலைவாசி உயர்வு, பொருளாதார வீழ்ச்சி, போன்றவற்றுக்கு முகம் கொடுக்கிறார்கள். அதே போல் சுனாமி வீட்டுத்திட்டத்தை இன்னமும் வழங்காமை, மௌலவி ஆசிரிய நியமனம் இழுத்தடிப்பு, மதங்களுக்கிடையில் குழப்பத்தை ஏற்படுத்தியோர் கைது செய்யப்படாமை என பல பிரச்சினைகளை மக்கள் எதிர் நோக்குகின்றனர். இவை எதைப்பற்றியும் எதிர் கட்சி என்ற வகையில் மக்கள் சார்ந்து சம்பந்தன் பேசாமல் விடுதலைப்புலிகளின் கோரிக்கைகளை முன்னெடுப்பதிலேயே கவனமாக செயற்படுகிறார்.

அத்துடன் கிளிநொச்சியிலும் அத்து மீறிச்செயற்பட்டுள்ளதன் மூலம் டயஸ் போராவின் நிகழ்ச்சி நிரலை கொண்டு செய்வதாக தெரிகிறது. ஆகவே அரசாங்கம் சம்பந்தன் விடயத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என முபாறக் மௌலவி தெரிவித்தார்.

மேற்படி சத்தியாக்கிரகத்தில் நவ சிஹல உறுமய கட்சி சார்பில் அதன் தலைவர் சரத் மனமேந்திர, தேச விமுக்தி பெரமுன தலைவர் கம்மரென்சி தேரர், நக்சத் லங்கா மஹா சபா தலைவர் ஜயந்த கலதுங்க ஊனமுற்ற இராணுவத்தின் சார்பில் திரு. அஜித் உட்பட பல கட்சித்தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -