மத்திய மாகாண முதலமைச்சரினால் பஸ் தரிப்பு நிலையம் திறப்பு..!

க.கிஷாந்தன்-
பொகவந்தலாவ நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கடைதொகுதியும் பஸ் தரிப்பு நிலையத்தையும் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக அவர்களினால் 10.04.2016 திறந்து வைக்கப்பட்டது.

அம்பகமுவ பிரதேச சபையின் 44 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட பிரதான பஸ் தரிப்பிடத்துடன் 21 கடை தொகுதிகளையும் கொண்ட புதிய கட்டிட தொகுதி மக்கள் பாவனைக்கு 10.04.2016 அன்று சம்பிரதாய பூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் மத்திய மாகாண இந்து கலாசார தமிழ் கல்வி அமைச்சர் ராமேஸ்வரன், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான கணபதி கணகராஜ், சோ.ஸ்ரீதரன், எம்.ராம், அம்பகமுவ பிரதேச சபையின் முன்னால் தலைவர் வெள்ளையன் தினேஸ் மற்றும் அம்பகமுவ பிரதேச சபையின் செயலாளர் எஸ். சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -