நோர்வூட்டில் உயிருடன் சிறுத்தை மீட்பு..!

க.கிஷாந்தன்-
லையில் சிக்குண்ட நிலையில் இருந்த சிறுத்தை ஒன்றை வன விலங்கு அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் - வெஞ்சர் தோட்டத்தில் 28.04.2016 அன்று காலை சிறுத்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

5 அடி நீளமும் 3 உயரமும் கொண்ட மேற்படி சிறுத்தையானது இனம் தெரியாதோரால் மிருகம் வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்டிருந்த வலையில் சிக்குண்ட நிலையில், பிரதேச மக்கள் கண்டு நோர்வூட் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். 

மேலும், வலையில் சிக்குண்ட நிலையில் இருந்த மேற்படி சிறுத்தை உயிருடன் நல்லதண்ணி வன விலங்கு பாதுகாப்பு அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -