மஹிந்த அணிக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!

மேதினக் கூட்டத்தை சாலிகா மைதானத்தில் நடாத்துவதற்கு எதிர்பார்த்திருந்த மஹிந்த அணியினருக்கு சாலிகா மைதானத்திற்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தடை உத்தரவானது இன்று முதல் எதிர்வரும் 14ம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என நாரஹேன்பிட்டி நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

அனைத்து ஊழியர் சங்கங்களையும் ஒன்றிணைத்து மேதினக் கூட்டத்தை மஹிந்த அணி பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடத்திக் காட்டுமென அக்கட்சியின் ஏற்பாட்டாளர்கள் அண்மையில் குறிப்பிட்டிருந்தனர்.

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றிணை பதிவு செய்திருந்தமையினாலேயே குறித்த உத்தரவை நீதிபதி பிறப்பித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -