செல்பி வீடியோ எடுத்தபடியே புதுமணத் தம்பதிகள் தூக்கிட்டுத் தற்கொலை - video

திருப்பதி தேவஸ்தான விடுதியில் செல்பி வீடியோ எடுத்தபடியே, புதுமணத் தம்பதிகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான விடுதி ஒன்றில், கோவையைச் சேர்ந்த புதுமணத் தம்பதி ஒன்று நேற்று அறை எடுத்துள்ளனர்.

காலை வெகுநேரமாகியும் அவர்களது அறை திறக்கப்படாமல் இருந்ததால், சந்தேகமடைந்த ஊழியர்கள் பொலிசாரின் உதவியோடு அறைக் கதவைத் திறந்துள்ளனர்.

அப்போது, அங்கிருந்த மின்விசிறியின் சுடிதார் துப்பட்டாவினால் அத்தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தற்கொலைக்கு முன்னதாக அவர்கள் இருவரும் செல்பி வீடியோ எடுத்துள்ளனர். பொலிசாரின் முதல் கட்ட விசாரணையில் அவர்கள் கோவையை சேர்ந்த சம்பத்குமார் (25), சத்தியவாணி (25) என்பது தெரியவந்துள்ளது.

தற்கொலை செய்து கொண்ட அவர்கள் உண்மையில் திருமணமான தம்பதிகளா? அல்லது காதலர்களா? அவர்களது தற்கொலைக்கான காரணம் என்ன எனபது குறித்து பல்வேறு கோணங்களில் பொலிசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், கோயம்புத்துார், கருவாக்கம் மண்டலத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் மகன் சம்பத்குமார், சமீபத்தில் திருமணமான தன் மனைவி சத்யவாணியுடனே தற்கொலை செய்துள்ளதாக தெரிய வருகிறது.

மேலும் அவர்கள் எடுத்துக்கொண்ட வீடியோ பதிவு குறித்தும் விசாரணை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -