ரமழானை முன்னிட்டு நிந்தவூரில் 100 குடும்பங்களுக்கு இலவச நீர் இணைப்பு...!

சுலைமான் றாபி-
நிந்தவூர் நலன்புரிச் சபையின் சமூகசேவை மற்றும் சமூக நலன்புரி பிரிவினரின் ஏற்பாட்டில் புனித ரமழானை முன்னிட்டு சமுர்த்தி உதவி பெறும் 100 குடும்பங்களுக்கு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் இலவச நீர் இணைப்பினை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவரும், ஓய்வு பெற்ற முன்னாள் மாகாண கல்விப்பணிப்பாளருமான எம்.எச். யாக்குப் ஹசன் தெரிவித்தார். 

மேலும் குறிப்பிட்ட நீர் இணைப்பினை எதிர்வரும் புனித ரமழானிற்கு முன்னர் சமுர்த்தி உதவி பெறும் 100 குடும்பங்களுக்கு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

இதேவேளை நிந்தவூர் நலன்புரிச்சபையானது இஸ்லாமிய முறையிலான நிதி நடைமுறையொன்றினை நிந்தவூரில் நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -