11.30 மணி முதல் 1.30 மணி வரை­ மாண­வர்­களை வெளியில் செல்­வ­தற்கு அனு­ம­திக்க வேண்­டாம்

நாட்டில் பல்­வேறு பகு­தி­க­ளிலும் வெப்பநிலை அதி­க­ரித்து காணப்­ப­டு­வதால் முற்­பகல் 11.30 மணி முதல் பிற்­பகல் 1.30 மணி வரை­யி­லான காலப்­ப­கு­தியில் பாட­சாலை மாண­வர்­களை வகுப்­ப­றையை விட்டு வெளியில் செல்­வ­தற்கு அனு­ம­திக்க வேண்­டா­மென சுகா­தார போசணை மற்றும் சுதேச வைத்­திய அமைச்சு பாட­சாலை அதி­பர்­களை வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

இது தொடர்பில் அமைச்சு விடுத்­துள்ள அறிக்­கையில் மேலும் குறிப்­பி­ட்டுள்ளதாவது,

கடந்த சில மாதங்­க­ளாக பல மாவட்­டங்­களில் வெப்­ப­நிலை அதி­க­ரித்து காணப்­ப­டு­கி­றது. அதி­க­ரித்த வெப்­ப­மா­னது பாட­சாலை மாண­வர்­களை அதி­க­மாக பாதிக்கச் செய்­கின்­றது.

எனவே மாண­வர்­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்தும் வகை­யி­லான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். அந்த வகையில் வெயில் அதி­க­ரித்த காலப்­ப­கு­தியில் மாண­வர்­களின் வெளிப்­பாட விதா­னங்­களை தவிர்த்­துக்­கொள்­ளு­மாறு அமைச்சு ஆலோ­சனை வழங்­கு­கி­றது.

மேலும் வகுப்­ப­றை­களில் கத­வுகள், ஜன்­னல்கள் திறக்­கப்­பட்ட நிலையில் காற்­றோட்­ட­மான சூழலில் மாண­வர்­களின் கற்றல் செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்துச் செல்ல நட­வ­டிக்கை எடுப்பதோடு முடிந்த வரை மாணவர்களுக்கு தேவையான சுத்தமான குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்குமாறும் அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -