2007ம் ஆண்டு ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்குச் சென்றதனால் ஏற்பட்ட கலகம் தொடர்பில் விபரித்துள்ள கூட்டு எதிர்க்கட்சிக்கு உரிமை கோரும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, தான் அங்கு சென்றது மஹிந்த ராஜபக்சவின் வேண்டுகோளுக்கு இணங்கவே என தெரிவித்துள்ளார்.
அங்கு சென்ற மேர்வினின் பேச்சின் பின்னணியில் கை கலப்பு உருவாகி, மேர்வின் சில்வா தாக்கப்பட்டிருந்தார்.
எனினும், அன்றைய தினம் தான் அங்கு செல்ல வேண்டிய எந்தத் தேவையும் இருக்கவில்லையெனவும் மஹிந்தவின் வேண்டுகோளுக்கிணங்கவே அங்கு சென்றதாகவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.