அப்துல்சலாம் யாசீம்-
மே மாதம் 23ம் திகதி தேசிய இளைஞர் தினமாகும் அதனை முன்னிட்டு 25ம் திகதி திருகோணமலை மாவட்டத்தில் ஒரு கழகம் ஆகக்குறைந்தது ஜயாயிரம் ரூபாயினை சேகரிக்க வேண்டுமென தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் திருகோணமலை மாவட்ட பணிப்பாளர் ஆலிதீன் ஹமீர்இன்று (18) தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்ட ஊடகவியளாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:
தேசிய மட்டத்தில் அதிகளவிலாள நிதிகளை திறட்டுகின்ற இளைசர் கழக பிரதேச சம்மேளனத்திற்கு 1வது பரிசாக 50 ஆயிரம் ரூபாயும் 02வது பரிசாக 40 ஆயிரம் ரூபாயயும் -30 ஆயிரம் ரூபாய் மூன்றாவது பரிசாகவும் நான்காவது பரிசு 20 ஆயிரம் ரூபாய் ஆகவும் 05வது பரிசு 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளதாவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் தேசிய மட்டத்தில் கூடுதலான நிதிகளை திறட்டுகின்ற இளைஞர் கழகங்களுக்கு 01வது பரிசாக 25 ஆயிரம் ரூபாயும் 02வது பரிசாக 20 ஆயிரம் ரூபாயும் 03வது 15 ஆயிரம் ரூபாயும் 04வது பரிசாக 10 ஆயிரம் ரூபாயும் 05வது பரிசாக ஜயாயிரம் ரூபாயும் பரிசாக வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.