அஸ்ஹர் இப்றாஹிம்-
காரைதீவு கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலய வளாகத்தில் இன்று தோணாவின் நீர் மட்டம் இரவோடு இரவாக திடீரென அதிகரித்தமையினால் பாடசாலைக்கு காலை வேளையில் மாணவர்கள் நுழைவதில் சில கஸ்டமான நிலை நிலவிய போதிலும் அதிபர் மேற்கொண்ட முயற்சியின் பயனாக மாணவர்களும் ஆசிரியர்களும் மற்றைய நுழைவாயிலினூடாக பாடசாலைக்கு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
காரைதீவில் இருந்து ஆரம்பித்து மாளிகைக்காடு ஊடாக சாய்ந்தமருதில் முடிவடையும் தோணாவின் நீர் மட்டம் இரவோடு இரவாக திடீரென அதிகரித்தமையினாலேயே மேலதிக நீர் பாடசாலை வளாகத்தினுள் புகுந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மூன்று தினங்களுக்கு மேலாக இப்பிரதேசத்தில் விடாத மழை பெய்தபோதிலும் கூட இவ் வெள்ளப் பெருக்கு ஏற்படவில்லை என அதிபர் ஏ.எல்.எம்.ஏ.நழீர் தெரிவித்தார்.