மஸ்கெலியாவில் மண்சரிவு மூன்று வீடுகள் சேதம்





க.கிஷாந்தன்-

ஸ்கெலியா - சாமிமலை ஸ்டர்ஸ்பி சூரியகந்தை தோட்டத்தில் மண்சரிவு காரணமாக 18 குடும்பத்தைச் சேர்ந்த 96 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு பணியில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சூரியகந்தை தோட்ட ஆறாம் இலக்க லயன் குடியிருப்பின் பின்புறத்தில் 13.05.2016 அன்று இரவு மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அத்தோடு 15.05.2016 அன்றும் தொடர்சியாக மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

மண்சரிவினால் மூன்று வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. எனினும் உயிராபத்துகள் எதுவும் இல்லையெனவும், சில பொருட்கள் மட்டும் சேதமாகியுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.

இதன்காரணமாக இக்குடியிருப்பில் வசித்து வந்த 96 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன் இவர்கள் தோட்ட சிறுவர் நிலையம், சிறுவர் முன்பள்ளி ஆகிய நிலையங்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தொடரும் மழை காரணமாக இப்பகுதியில் பாரிய அனர்த்தம் ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக இராணுவத்தினர் குறித்த பகுதியில் கடமையில் ஈடுபட நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -