முகாமைத்துவ உதவியாளர்களின் பிள்ளைகளை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு..!

ஏ.எம்.றிகாஸ்-
டந்த ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த கிழக்கு மாகாண முகாமைத்துவ உதவியாளர்களின் பிள்ளைகளை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அனைத்து முகாமைத்துவ உதவியாளர்கள் தொழிற் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு - வின்சன்ட் மகளிர் உயர் தரபாடசாலை (தேசிய பாடசாலை) மண்டபத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் (நிருவாகம்) ஏ.எச்.எம்.அன்சார் பிரதம அதிதியாகவும் சிறப்பு அதிதிகளாக ஆலையடிவேம்பு உதவி பிரதேச செயலாளர் த.கஜேந்திரன், உதவி பிரதம செயலாளர் (நிருவாகம்) எஸ்.பிரகாஷ்ஆகியோரும் கலந்துகொண்டனர்.

சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் வ.பற்குணன் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது அம்பாறை மாவட்டத்தின் 06 மாணவர்களுக்கும் ,மட்டக்களப்பு மாவட்டததைச் சேர்ந்த 17 மாணவர்களுக்கும் மற்றும் திருகோணமலை மாவட்ட 03 மாணவர்களும் பரிசில்களைப் பெற்றுக்கொண்டனர்.

தொழிற் சங்கத்தின் தலைவர் ஏ.ஜீ.முபாறக், செயலாளர் நாயகம் என்.ரமணீஸ்வரன், பொருளாளர் .யூஎல்.எம்.ஜவ்பர் ஆகியோரின் முயற்சியில் உருவாக்கப்பட்ட 'முகை' எனும் சிறப்புமலர் ஒன்றும் வெளியிடப்பட்டது. 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -