"முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் பேனை குத்திய இனவாதிகள்" அமைச்சர் றிசாட்

எஸ்.எச்.எம.வாஜித்-

ஜென்சீர் எழுதிய"இலட்சியத்தை நோக்கி" என்ற நூலின் வெளியீட்டு விழா நேற்று மாலை புத்/ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெறுகின்றது.

இன் நிகழ்வின் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,அமைச்சருமான றிஷாட் பதியுதீன் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்;
வடபுல முஸ்லிம்கள் வெளியேற்றம் என்பது எழுத்துறையில் மட்டும் அல்ல அணைத்து துறையிலும் பாரிய பின்னடைவினை ஈட்டுசென்றுள்ளது. என்றும் எமது முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் நோக்குடன் சில இனவாத குழுக்களும்,பேனை கூத்திய அதிகாரிகளும் செயற்பட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். 

எமது மக்களின் மீள்குடியேற்றத்தை கூட தென்னிலங்கையில் உள்ள சில இனவாத அமைப்புகளும் அரசியல்வாதிகளும் போலி பிரச்சாரமாக முன்னேடுத்து செல்லுகின்றார்கள் .எனவே நாங்கள் இன்னும் கல்வி துறையிலும்,எழுத்துதுறையிலும் மட்டும் அல்லாமல் அணைத்து விடயங்களிளும் தேர்ச்சிபெற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இன் நிகழ்வில் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஸ்ஷாக்,கலாநீதி அனீஸ்,வடமாகாண சபை உறுப்பினர் ஜனூபர் மற்றும் இன்னும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நூல்களின் பிரதிகளை அமைச்சர் றிஸாட் பதியுதீன் வழங்கி வைத்தார் என்பது குறிப்பிடதக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -