நாட்டுக்கு சேவையாற்றிய சிறந்த முஸ்லிம் தலைவர் ஹிஸ்புல்லாஹ் - ரோஹித புகழாரம்

ந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பாரிய சேவையாற்றி சிறந்த முஸ்லிம் தலைவர்களுள் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மிக முக்கியமானவர் என முன்னாள் அமைச்சரும் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரோஹித அபேகுணவர்தன நாடாளுமன்றத்தில் புகழாரம் சூட்டினார். . 

நிதி குறைநிரப்பு சட்ட மூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உறையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் கூறியதாவது;

நாங்கள் முக்கிய விடயங்கள் தொடர்பில் பேசும் போது அரச தரப்பிலுள்ள முக்கியமானவர்கள் இருக்க வேண்டும். தற்போது, எனது நண்பர் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மாத்திரமே நாடாளுமன்ற அமர்வில் உள்ளார். 

அவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டவர். தனது சமூகம் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியாக தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்காக மிகவும் சானக்கியமாக செயற்படக் கூடியவர். 

இவர் தனது பிரதேசத்துக்கு மாத்திரமல்லாது நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் பாரிய பங்களிப்பு செய்து வருகிறார். – என புகாழாரம் சூட்டினார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -