பாரிய இடி தாக்கத்தால் குடியிருப்புகள் அதிர்வு..!

க.கிஷாந்தன்-
ட்டன் எபோட்சிலி தோட்டப்பகுதியில் 02.05.2016 அன்று இரவு இடம்பெற்ற பாரிய இடி தாக்கத்தால் மக்கள் குடியிருப்புகள் அதிர்வுக்குள்ளான நிலையில் அத்தோட்டத்தில் பாரிய மரம் ஒன்றில் இந்த இடி வீழ்ந்து தீப்பற்றி எரிந்ததாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது இச்சம்பவத்தில் எபோட்சிலி தோட்ட தொழிலாளர்கள் எவருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை எனவும் தெரிவித்த பொலிஸார் அவர்களின் குடியிருப்புகளுக்கு இதுவரை எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்தனர்.

கடந்த ஓர் இரு நாட்களாக மலையக பகுதிகளில் ஆங்காங்ககே இடிகளுடன் கூடிய மழை மாலை வேளைகளில் பெய்து வருகின்றது.

கூடுதலாக அட்டன் பிரதேசத்தில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய அதிகமான மழை பெய்து வருகின்றமை குறிப்பிடதக்கது.

அவ்வப்போது மின்சார தடைகள் ஏற்பட்ட போதிலும் தொடர்ந்தும் வீடுகளுக்கான மின்சாரங்கள் உடனுக்குடன் கிடைக்க பெறுகின்றமையும், காலநிலை மாற்றத்தின் போது ஆபத்துகளை எதிர்கொள்ள நேரிடலாம் இதனால் மக்கள் அவதானத்தோடு இருக்கும்படியும் பொலிஸார் பொதுமக்களை கேட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -