ஏ.எஸ்.எம்.இர்ஷாத்-
பலஸ்தீன மக்கள் இன சுத்திகரிப்பின் 68வது ஆண்டு நிறைவு தினமான 'பலஸ்தீன் நக்பா தினம் ஞாயிற்றுக்கிழமை(15) அனுஷ்டிக்கப்பட்டது. சுதந்திர உலகிற்கான இளைஞர்கள் அமைப்பு இதனை ஏற்பாடு செய்திருந்தது.
வெள்ளவத்தையிள்ள சோனகர் இஸ்லாமிய கலாச்சார நிலையத்தில் சட்டத்தரணி யூ.எல்.எம்.மர்சூக் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக இலங்கைக்கான பலஸ்தீன் தூதுவர் சுஹைர் எம்.செய்யிட் கலந்து கொண்டதுடன் சிறப்பதிதியாக மொப்சி அமைப்பின் தலைவர் சங்கைக்குரிய கலகம தம்மரன்சி தேரர் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்நிகழ்வில் சட்டத்தரணி மர்சூக், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான பலஸ்தீன் அமைப்பின் தலைவர் கலாநிதி அஜித் ரூபசிங்க சுதந்திர, சங்கைக்குரிய கலகம தம்மரன்சி தேரர், சுதந்திர உலகிற்கான இளைஞர் அமைப்பின் தலைவர் டொக்டர் ஹசன் ரூயவரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் ஆகியோர்கள் உரையாற்றினார்கள்.
இந்த நிகழ்வில் புத்திஜீவிகள், கல்விமான்கள், ஊடகவியலாளர்கள், ஈரான் இஸ்லாமிய குடியரசின் கலாச்சார பிரதிநிதி மெஹம்மட கரீமி உள்ளிட்ட அதிக எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பலஸ்தீன் நக்பா தினத்தை முன்னிட்டு பலஸ்தீPன் மக்களின் நிலைகுறித்த கண்காட்சியும் இடம்பெற்றது.