யாழ்ப்பாணம்,கிளிநொச்சி மக்கள் எதிர்நோக்கும் சுத்தமான குடிநீர் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு...!

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் மக்கள் எதிர்நோக்கும் சுத்தமான குடிநீர் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணும் நோக்கில் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து பெறக்கூடிய நிதியுதவியின் மூலம் முன்னெடுக்கப்படவுள்ள நீர் விநியோக செயற்திட்டங்களைத் துரிதப்படுத்தும் விதத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீமின் தலைமையில் வெள்ளிக்கிழமை (07)பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. 
பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா, ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான வதிவிடப்பணிப்பாளர் ஸ்ரீ விதோவடி, இலங்கைக்கான சிரேஷ்ட முகாமைத்துவ நிபுணர் அமிலா சல்காது மற்றும் உட்கட்டமைப்புக்கான செயற்திட்ட அதிகாரி கமல் தஹநாயக்க, நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் என்.டீ.ஹெட்டிஆராச்சி, மேலதிகச் செயலாளர், எல்.மங்கலிக்கா, நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் தலைவர், பொறியியலாளர் கே.ஏ.அன்சார், பொதுமுகாமையாளர், பொறியியலாளர் பி.டபிள்யூ.பாலசூரிய, செயற்திட்டப் பணிப்பாளர் பாரதிதாசன் ஆகியோர் இதில் பங்குபற்றினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -