கேகாலை - புலத்கொஹுபிட்டிய களுபஹனவத்த தோட்டத்தில் நேற்றிரவு ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி காணாமற்போயிருந்தவர்களில் மூவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மண்சரிவினால் 10 அறைகளைக் கொண்ட பெருந்தோட்ட மக்கள் குடியிருப்பு ஒன்றின் ஆறு அறைகள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளது.
இந்த மண்சரிவில் சிக்கி 6 ஆண்கள், 8 பெண்கள், 2 சிறுமிகள் என 16 பேர் காணாமற்போயிருந்த நிலையில் மூவரது சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு ஏற்பட்ட இந்த மண்சரிவில் பல வீடுகள் மண்ணில் புதைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார். களுபஹனவத்தை ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி காணாமற்போனவர்களை தேடும் பணிகளை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஆரம்பித்துள்ளனர்.