இவ்வருடம் ஹஜ் கடமையை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கும் ஹஜ் யாத்திரிகர்கள் முன் கூட்டியே ஹஜ் முகவர்களுக்கு பணம் செலுத்த வேண்டாம் எனவும் முஸ்லிம் சமய விவகார அலுவல்கள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக இவ்வருடத்துக்கான பெயர் விபரங்களை வெளியிட்ட பின்னரே முகவர்களுடன் பொது மக்கள் தொடர்புகொள்ள வேண்டுமெனவும் முஸ்லிம் சமய விவகார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம்.எச்.எம். சமீல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஹஜ் யாத்திரிகர்கள் ஹஜ் கடமைக்காக ஏற்கனவே ஹஜ் முகவர்களிடம் பணத்தை செலுத்துவதன் மூலம் பல பிரச்சினைகள் உருவாவதற்கு காரணமாக அமைகின்றது. அவ்வாறு பணம் செலுத்தினால் திணைக்களம் அதற்கு பொறுப்பாக மாட்டாது என திணைக்கள பணிப்பாளர் எம்.எச்.எம். சமீல் மேலும் தெரிவித்தார்.