நற்பிட்டிமுனை ஹூதா பள்ளிவாசலின் களஞ்சிய அறை அமைக்கும் பொருட்டு பள்ளிவாசல் நிருவாகத்தினரின் ஆலேசனைக்கமைவாக கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரின் இணைப்பாளருமான யூ.எல்.தௌபீக் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினரும் அம்பாரை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ எம்.ஐ.எம். மன்சூர் அவர்களின் இவ்வருட (2016) பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து ரூபா 300000.00 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வொதுக்கீட்டினை உறுதிப்படுத்திய கடிதம் கல்முனை பிரதேச செயலகத்தினால் தமக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பள்ளிவாசல் நிருவாகத்தினர் தமது இணையத்தள செய்திச் சேவைக்கு தெரியப்படுத்தியதுடன் இந் நிதியினை பெற்றுத்தருவதற்கு உறுதுணையாக அமைந்த யூ.எல்.தௌபீக் அவர்களுக்கும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களுக்கும் நற்பிட்டிமுனை மக்கள் சார்பாக நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதாக பள்ளிவாசல் நிருவாகத்தினர் மேலும் தெரிவித்தனர்.
யூ.எல்.தௌபீக்.