எஸ்.அஷ்ரப்கான்-
நாட்டில் பெய்து வரும் அடை மழை காரணமாக களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துவருகிறது. இதனால் மல்வானை றக்ஸபான பிரதேசத்தில் வெள்ளம் அதிகரித்து போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
மல் வானை பிரதேச வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள் மற்றும் தனியார் நிறுவனங்களின் செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளதுடன்மல்வானை அல்- முபாறக் கனிஷ்டவித்தியாலத்தில் வெள்ளம் புகுந்துள்ளமையால் அப்பாட சாலைநேற்று (16) முதல் மூடப்பட்டுள்ளதாக அதிபர் எஸ்.எல்.எம்.ஜெஸீம் தெரிவித்தார். வகுப்பறை மற்றும் பாடசாலை வளாகத்துள் நீர் புகுந்துள்ளமையால் டெங்கு நுளம்புகள் பெருகும் அபாயம் காணப்படு கிறது.
இதே வேளை இப்பாடசாலையின் சுற்றுப்புற ச் சூழலில் வசிக்கும் பிரதேசவாசிகளுக்கும் நோய்கள் பரவும் அபாயம் காணப்படுகிறது.