அம்பாரை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தென்னிந்திய பிரபல மார்க்கப் பிரச்சாரகர் அன்சார் ஹூசையின் பிர்தௌசி எதிர்வரும் வாரங்களில் சிறப்புரையாற்றவுள்ளார்.
அட்டாளைச்சேனை ஹன்ழலா பின் ஆமிர் ஜூம்ஆ பள்ளிவாசலில் எதிர்வரும் 2016.05.20ந் திகதி (வெள்ளிக்கிழமை) ஜூம்ஆ பிரசங்க உரையுடன், மாலை 4.00மணிக்கு பெண்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் மாநாட்டிலும்; உரையாற்றவுள்ளார்.
மேலும், அன்றைய தினம் அக்கரைப்பற்று கடற்கரை திறந்த வெளியரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாட்டிலும் கலந்து சிறப்புரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனவே இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்