கொள்ளையில் ஈடுபடும் பெண் தொடர்பாக பொலிஸ் எச்சரிக்கை..!

பாறுக் ஷிஹான்-
யாழ்ப்பாணதத்தில் பல பகுதிகளில் ஏமாற்றி கொள்ளையில் ஈடுபடும் இளம்பெண் தொடர்பான தகவல்களை உடனடியாக வழங்குமாறு பொதுமக்களை சுன்னாகம் பொலிஸார் வேண்டியுள்ளனர்.

சுமார் 22 வயது மதிக்கத்தக்க சொந்த முகவரி அற்ற குறித்த பெண் பல்வேறு இளைஞர்களை தொடர்பு கொண்டு காதல் வலையில் வீழ்த்தி எட்டு இலட்சத்திற்கு அதிகமான பணம், நகைகளை கொள்ளையிட்டு மறைந்து வாழ்வதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

தற்போது கொழும்பு புறநகர் பகுதியில் நடமாடி வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களிற்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த சந்தேக நபரான தேனுகா ரவீந்திரன் (வயது22) என்பவர் பல இளைஞர்களை தொடர்புகொண்டு பல இலட்சங்களை திருடி தலைமறைவானார்.

இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் 0212240323 என்ற தொலைபேசி ஊடாக தகவல்களை வழங்குமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -