வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு ஏற்பாடுகள் : தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளவும்



தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக நாட்டில் பல பாகங்களிலும் மக்கள் பலத்த பாதிப்புக்குள்ளாகியுள்ளார்கள். நாட்டின் தலை நகரமான கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய பகுதிகள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் களப்பணி ஆற்றி வருகின்றது. 

நேற்று இரவு வெள்ள பாதிப்பு நடந்த பகுதிகளில் தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர்கள் களப்பணி ஆற்றிய காட்சிகள்

இணைப்பு 2


கொழும்பு மற்றும் கொழும்பை அண்மித்த பகுதிகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சகோதரர்களுக்காக உணவு சமைத்துக் கொடுக்கும் பணியில் தவ்ஹீத் ஜமாஅத் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் ஜமாஅத்தின் தலைமையகத்திற்கு முன் உணவு சமைக்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

முன்னதாக, கொழும்பில் பாதிக்கப்பட்டு தங்க இடமின்றி தவிக்கும் சகோதரர்கள் ஜமாஅத்தின் தலைமையகத்தில் தாரளமாக தங்கிக் கொள்ளலாம் என்றும் ஜமாஅத் அறிவித்துள்ளது. - ஆண் பெண் இரு பாலாருக்கும் தனித் தனி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கொழும்பு மற்றும் அண்மித்த பகுதிகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு உணவின்றி தவிக்கும் சகோதரர்கள் ஜமாஅத்தை தொடர்பு கொண்டார் அவர்களுக்குறிய உணவு ஏற்பாடுகள் செய்யப்படும்  - தொடர்பு கொள்ள வேண்டிய தொலை பேசி இலக்கம் 0774781479 (சகோதரர் முயீன்)








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -