இன்று ஞாயிற்றுக்கிழமை செல்வச்சந்நிதியிலிருந்து இலங்கையின் மிகநீண்ட கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம் !





காரைதீவு சகா-

டக்கு – கிழக்கு – ஊவா ஆகிய 03 மாகாணங்களையும் யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை மொனராகலை ஆகிய ஏழு மாவட்டங்களை இணைக்கும் 56 நாட்கள் 572 கி.மீற்றர் தூரம் கொண்ட இலங்கையின் மிக நீண்ட கதிர்காமப் பாதயாத்திரை வேல்சாமி தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகின்றது.

இன்று மே மாதம் 15ஆம் திகதி யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி முருகனாலயத்திலிருந்து ஆரம்பமாகும் வேல்சாமி தலைமையிலான இலங்கையின் நீண்ட பாதயாத்திரைக்குழுவினர் மே மாதம் 23இல் முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகையம்மனாலயத்தை சென்றடைவர்.
அங்கிருந்து கொக்கிளாய் புல்மோட்டையூடாக மே31இல் திருகோணமலையைச் சென்றடைந்து வெருகல் மட்டக்களப்பூடாக யூன் மாதம் 15ஆம் திகதி தாந்தாமலையை அடைவர்.
பின்னர் பழுகாமம் மண்டுர் பெரியகல்லாறுஊடாக யூன் 20இல் காரைதீவைச் சென்றடைவர்.

அங்கிருந்து அக்கரைப்பற்று திருக்கோவில் பொத்துவிலூடாக யூன் 29ஆம் திகதி உகந்தைமலை முருகனாலயத்தை அடைவார்கள்.
பின்னர் யாலகாட்டுப்பாதைக்குள் பிரவேசித்து குமுக்கன் நாலடி வியாழை கட்டகாமம் வீரச்சோலை செல்லக்கதிர்காமம் ஊடாக யூலை 05ஆம் திகதி கதிர்காமத்தைச் சென்றடைவார்கள்.
ஆடிவேல்விழா உற்சவம் யூலை 5இல் ஆரம்பம்!

மூவின மக்களும் பேதமின்றி தரிசிக்கும் புனிதபூமியாம் கதிர்காமத்திருத்தலத்தின் வருடாந்த ஆடிவேல்விழா உற்சவம் எதிர்வரும் யூலை 05ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி யூலை 21ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.
இந்த ஆடிவேல்விழாவையொட்டி இடம்பெறும் பாதயாத்திரை என்பது மிகவும் முக்கியமாகக்கருதப்படுகிறது.

வருடமொன்றுக்கு யால காட்டினூடாக சராசரி 40ஆயிரம் முதல் 50ஆயிரம் அடியார்கள் வரை நடந்து கதிர்காமத்திற்கு சென்று வருவதுண்டு. யுத்தம் நிலவிய காலப்பகுதியிலும்கூட பாதுகாப்புக்கெடுபிடிகள் பதிவுகள் மத்தியிலும் அடியார்கள் சென்று வந்திருந்தனர்.

90வீதமானோர் உகந்தைமலை முருகனாலயத்திலிருந்துதான் காட்டினுடாக இப்பாதயாத்திரையை மேற்கொள்வது வழமை. 10வீதமானோர் மட்டுமே நாடு நகரங்களினுடாகவும் பிரதானவீதிகளினூடாகவும் பயணிப்பர்.
அங்கிருந்து குமண பறவைகள் சரணாலயம் வாகூரவட்டை ஊடாக கூமுனை குமுக்கன் ஆற்றை அடைந்து அங்கிருந்து அடர்ந்த காட்டுக்குள்ளால் நாவலடிமடு வியாழை வள்ளியம்மன் ஆறு கட்டகாமம் ஊடாக கதிர்காமத்தைச் சென்றடைவது வழமை.

காட்டிற்குள் ஆறு அல்லது ஏழு தினங்கள் பாதயாத்திரையினர் தங்கியிருப்பர். சுமார் 80கிலோமீற்றர் காட்டிற்குள் அவர்கள் பயணித்து கதிர்காமத்தை 05ஆம் திகதியளவில் அடைவார்கள். கொடியேற்றம் 05ஆம் திகதி.அதனைக்கண்டு அவர்கள் பாதயாத்திரையை நிறைவுசெய்வார்கள்.

வடக்கு கிழக்கு பிரதேசங்களிலிருந்து 90வீதமான அடியார்கள் பாதயாத்திரையிலீடுபடுவார்கள்.எனினும் மேல் தென் மாகாணங்களிலிருந்தும் அடியாhர்கள் நடந்துவருவதுண்டு.
இதைத்தவிர வெருகல் மாமாங்கம் மண்டுர் என்று தலங்களிலிருந்து செல்லும் பாதயாத்திரைக்குழுவினருமுள்ளனர். சிவாச்சாரியார் தலைமையிலான குழுவினரும் யாத்திரையிலீடுபடுவது வழமை.
அமைப்பு ரீதியாகவும் கூட்டம்கூட்டமாகவும் சிறுகுழுக்களாகவும் ஜோடியாகவும் தனியாகவும் இப்பாதயாத்திரையை அடியார்கள் மேற்கொள்வதுண்டு.

எனினும் யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகும் 56 நாட்கள் கொண்ட வேல்சாமி தலைமையிலான பாதயாத்திரைதான் இலங்கையில் நீண்ட கதிர்காமப்பாதயாத்திரையாகக்கருதப்படுகிறது.
பாதயாத்திரை நிகழ்ச்சிநிரல்!
அதற்கான நிகழ்ச்சிநிரல் வெளியிடப்பட்டுள்ளது.பங்கேற்பவர்கள் கடைப்பிடிக்கப்படவேண்டிய விதிமுறைகள் அதில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.

பாடசாலை செல்லும் மாணவர்கள் கலந்துகொள்ளமுடியாது.ஆண்கள் மேலங்கி அணியக்கூடாது.வேட்டி அணிதல் கட்டாயமாகும்.பெண்கள் சேலைஅணிதலவசியமாகும்.

இலங்iகின் எந்தப்பாகத்திலுள்ளோரும் பாதயாத்திரையில் பங்கேற்கலாம்.ஆனால் பாதயாத்திரை ஆரம்பமாக முன்னர் தொடர்புகொண்டு பதிவுசெய்துகொள்ளவேண்டும்.மேலதிக தொடர்புகளுக்கு வேல்சாமி மகேஸ்வரன்-0773483437 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ளலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -