கொழும்பு ஜனாதிபதி மாவத்தையில் அமைந்துள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படவுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.
1972 ஆண்டு இலங்கை குடியரசாக அறிவிக்கப்படும் வரையில் குறித்த இல்லம் “ராணி மாளிகை” என வர்ணிக்கப்பட்டது. அதன் பின்னர் இலங்கையை ஆட்சி செய்த அனைத்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளும் இந்த இல்லத்தில் வாழ்ந்துள்ளனர்.
என்றாலும் இறுதியாக ஆட்சி செய்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் குறித்த உத்தியோகபூர்வ இல்லத்தில் தேவைக்கு அதிகமான அபிவிருத்திகள் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியதுடன், நிலக்கீழ் மாளிகைகள் தொடர்பிலும் செய்திகள், புகைப்படங்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையிலேயே ஊழல்களுக்கு எதிரான நல்லாட்சி எனும் தொனிப்பொருளில் ஆட்சிபீடமேறிய தற்போதைய அரசு, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தை பொது மக்கள் பார்வைக்கு திறக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.