அக்கரபத்தனையில் சிறுத்தை உயிரிழந்தமைக்கு காரணம் இதுதான்...!

க.கிஷாந்தன்-
க்கரபத்தனை பகுதியில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுத்தை விஷம் கலந்த உணவு உட்கொண்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக வன ஜூவராசிகள் திணைக்களத்தின் நிறைவேற்று பணிப்பாளர் சுமித் பிலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

குறித்த சிறத்தை உயிரிழந்திருந்த இடத்திற்கு அண்மையில் நாய்கள் இரண்டும் உயிரழந்து கிடந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்த நாய்களுக்கு விஷம் கலந்து உணவை வழங்கி சிறுத்தையை கொலை செய்திருக்கலாம் என திணைக்களத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சம்பவங்களை தவிர்த்து கொள்வதற்காக இராணுவத்தினரை குறித்த பகுதிக்கு பாதுகாப்பிற்காக அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2 மாதங்களில் மாத்திரம் 5 சிறுத்தைகள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அக்கரபத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரஸ்டன் தோட்டத்தில் 08.05.2016 அன்றும் 09.05.2016 அன்றும் சிறுத்தையின் உடல்கள் மீட்கப்பட்டது.

தங்களின் வீடுகளில் உள்ள செல்லப்பிராணிகளை சிறுத்தைகள் கொன்று உட்கொள்வதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். சில சமயங்களில் தங்களையும் தாக்கியுள்ளதாக பிரதேசவாசிகள் மேலும் தெரிவித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -