வவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் கலாசார நிகழ்வுகள்...!

வுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் அங்கம் வகிக்கும் வவுனியா பிரதேச சம்மேளன கழகங்களின் ஒத்துழைப்புடன் மாபெரும் கலாசார மற்றும் புதுவருட விளையாட்டு விழா இளைஞர் கழக மாவட்ட சம்மேளன முன்னாள் தலைவர் திரு ரி.அமுதராஜ் தலைமையில் இன்றையதினம் (07/05/2016) சிதம்பரபுரம் பொது விளையாட்டு மைதானத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது. 

இவ் நிகழ்வின் இறுதி நிகழ்வான பரிசளிப்பு நிகழ்வில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்கள் அதிதியாக கலந்து நிகழ்வினை சிறப்பித்தார். 

நிகழ்வில் கருத்து தெரிவித்த தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன், எமது பிரதேச இளைஞர்களின் ஆக்கமும் ஊக்கமும் தான் இன்றைய கலாசார நிகழ்வின் வெற்றியின் திறவுகோல். இளைஞர்களின் மூலமே சிறந்த சமூதாய கட்டமைப்பை நாங்கள் எமது கிராமங்களில் தோற்றுவித்து வளமான எதிர்காலத்தினை நாம் உருவாக்க என்றும் முயற்சி உள்ளவர்களாக திகழ வேண்டும். 

அத்துடன் தமிழ் தேசிய இளைஞர் கழகம் தனது உயரிய சிந்தனையுடன் தொடர்ந்தும் இளைஞர்களின் முன்னேற்ற பாதைக்கு உறுதுணையாக இருக்கும் எனவும் தெரிவித்தார். 






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -