முஹம்மட் ஆசிக் கடத்தப்பட்டது ஏன்...? வெளியாகும் பிரமிட் திட்டம்

பிரமிட் திட்டம் எனும் சட்டவிரோத முதலீட்டுத் திட்டத்துக்கு நிதியை பெற்றுக் கொள்ளும் நோக்கிலே 2 கோடி ரூபாய் கப்பம் கோரி வாரியப்பொல பகுதியில் இளைஞர் முஹம்மட் ஆசிக் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இளைஞரை கடத்திய பிரதான சந்தேகநபர் மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் துறைப் பட்டதாரியாவார். இவர் பொலிஸாருக்கு வழங்கிய வாக்கு மூலத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த சந்தேகநபர் கடன் அட்டை மோசடிகளிலும் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

கடந்த 12 ஆம் திகதி வாரியப்பொல பகுதியில் வைத்து முஹம்மட் ஆசிக் என்ற 20 வயதான இந்த இளைஞர் ஒரு குழுவால் கடத்தப்பட்டிருந்தார்.

பின்னர் நேற்று (15) அதிகாலை நிக்கவரட்டிய பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் குறித்த இளைஞன் மீட்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு பேரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -