தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் வைத்தியசாலையில் அனுமதி...!

உணவு ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் அம்பாறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீட மாணவர்களே உணவு ஒவ்வாமையினால் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என அம்பாறை வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழகத்தின் விடுதியில் வழங்கப்பட்ட உணவை உட்​கொண்டதன் பின்பே நேற்றிரவு மாணவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான  பீடத்தின் மாணவப் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -