பாலமுனை முஹா வின் "கடலோரத்து மணல்" நூல் அறிமுக விழா! ரவூப் ஹக்கீம் பிரதம அதிதி!!

அய்ஷத் ஸெய்னி-

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் தெரிவு செய்யப்பட்டு வெளியீட்டு வைக்கப்பட்ட கவிஞர் பாலமுனை முஹா வின் 'கடலோரத்து மணல்' நூல் அறிமுக விழா 22.05.2016 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை பாலமுனை கடற்கரை வெளியில் திறந்த விழாவாக நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

இவ்விழாவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சரும் கவிஞருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகவும் இன்னும் பாராளுமன்ற உறுப்பினர்கள், இலக்கிய உரையாளர்கள், படைப்பாளிகள், ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

பல கலையம்ச நிகழ்வுகளுடன் நடைபெறவுள்ள இவ்விழாவின் இறுதியில், பிரதேச கவிஞர்கள் கலந்து சிறப்பிக்கும் 'நிலாப் பொழுதில் மகிழ்வோம்' கவியரங்க நிகழ்வும் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.

எல்லோரும் வருக! இன்பம் பெறுக.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -