நாடாளுமன்றில் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது. நேற்று நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்ட குறைநிரப்பு பிரேரணை வாக்கெடுப்பு தொடர்பில் ஆளும் எதிர்க்கட்சியினருக்கு இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்றில் ஏற்பட்ட அமளியைத் தொடர்ந்து அவை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை நேற்றைய தினம் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் தலைமயில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நியமிக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ச, ரவுப் ஹக்கிம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சமால் ராஜபக்ச ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.