இரா­ணு­வத்தை வைத்­துக்­கொண்டு ஆட்­சியை கைப்­பற்­றலாம் என மஹிந்த கனவு காணு­கிறார்

தற்­காக அவர் விகா­ரைகள் தோறும் சென்று தேரர்களை தூண் டும் வகையில் செயற்­ப­டு­கிறார். மஹிந்­தவின் தந்தை உயிர்ப்­பித்து எழுந்­தாலும் இந்த அர­சாங்­கத்தை வீழ்த்த முடி­யாது என தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் அஸாத் சாலி தெரி­வித்தார்.

யுத்­த­கா­லத்தில் டொய் போலால் கூட புலிகள் தாக்­குதல் நடத்­தாத மஹிந்­த­வுக்கு 200பேர் கொண்ட பொலிஸ் பாது­காப்பு போதாதா எனவும் அவர் கேள்வி எழுப்­பினார்.

அதி­கா­ரத்தை பகிர்ந்து ஐக்­கி­யப்­ப­டுத்தும் இயக்கம் நேற்றுமுன்தினம் கொழும்பில் நடத்­திய ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,

நாட்டை 11வரு­டங்கள் ஆட்சி செய்த மஹிந்த ராஜபக் ஷ நாட்டில் செய்­ய­வேண்­டிய அனைத்­தையும் செய்­து­ மு­டித்தார். புலி­களின் குண்­டுத்­தாக்­கு­தலில் ஒரு கண்ணை இழந்த முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்­க­வுக்கு வழங்­கப்­பட்­டி­ருந்த 60 பேர் கொண்ட பாது­காப்பு படையை நீதி­மன்றம் சென்று 30ஆகக் குறைத்தார்.

அதே­போன்று யுத்­த­க­ளத்தில் இரா­ணுவ தளப­தி­யாக இருந்து யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வந்த சரத் பொன்­சே­காவை சிறை­யி­ல­டைத்து படாத பாடு­ப­டுத்­தினார். ஆனால் இன்று பீல் மாஷல் பதவி வகிக்கும் அவ­ருக்கு 15பேர் கொண்ட பொலிஸ் பாது­காப்பே வழங்­கப்­பட்­டுள்­ளது.

ஆனால் யுத்தம் இடம்­பெ­றும்­போது சிறிய டொய் போலால் கூட புலிகள் தாக்­குதல் நடத்த முற்­ப­டாத மஹிந்த ராஜ­பக் ஷ­ வுக்கு இரா­ணுவ பாது­காப்பு வழங்­கப்­ப­ட­வேண்டும் என கோரி அவரின் கையாட்கள் பாரா­ளு­மன்­றத்தில் அநா­க­ரி­க­மாக நடந்­து­ கொண்டு நாட்­டுக்குள் குழப்­பத்தை ஏற்­ப­டுத்த முயற்­சிக்­கின்­றனர்.

மஹிந்­த­வுக்கு இரா­ணுவ பாது­காப்பு வழங்­கப்­பட வேண்டும் என கோரு­வதன் மூலம் இரா­ணு­வத்தை வைத்­துக்­கொண்டு ஆட்­சியை கைப்­பற்றும் சதி நட­வ­டிக்­கையில் ஈடு­ப­டு­வதே இவர்­களின் நோக்­க­மாகும். இதற்­கா­கத்தான் ஒவ்­வொரு நாளும் விகா­ரை­க­ளுக்கு சென்று தேரர்களை தூண்­டி­வ­ரு­கிறார். அவர் என்­ன தான் சதி நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டாலும் அவரின் தந்தை

உயிர்த்­தெ­ழுந்­தாலும் இந்த அர­சாங்­கத்தை ஒரு­போதும் அவரால் வீழ்த்த முடி­யாது.

மேலும் மேதின கூட்­டத்­துக்கு பெரும் மக்கள் கூட்­ட­மொன்றை எதிர்­பார்த்து அவர்­க­ளுக்கு தயா­ரிக்­கப்­பட்ட உண­வு­வ­கைகள் கிரு­லப்­ப­னையில் சித­றிக்­கி­டப்­பதை காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது. இவற்­றுக்­கெல்லாம் கடந்த காலங்­களில் அர­சாங்­கத்தில் இருந்து கள­வெ­டுத்த பணமே செல­வி­டப்­பட்­டுள்­ளது. அத்­துடன் மேதி­னத்­துக்கு சில தினங்­க­ளுக்கு முன்னர் தாய்­லாந்­துக்கு சென்ற மஹிந்த மற்றும் ஜீ.எல்.பீரிஸ் அங்கு உக்ரேன் தூது­வ­ராக இருந்த உத­யங்க வீர­துங்­கவை சந்­தித்­துள்­ளனர்.

உத­யங்க வீர­துங்க தேடப்­பட்டு வரக்­கூ­டி­யவர். உக்ரேனில் இருப்­ப­தாக தெரி­வித்த உத­யங்க எவ்­வாறு தாய்­லாந்­துக்கு சென்றார் என்­பதை பொலிஸார் தேடிப்­பார்க்க வேண்டும். அர­சாங்கம் கடந்த காலத்தில் பாரிய மோச­டி­களை செய்­த­வர்­களை கைது­செய்­யாமல் தொடர்ந்து சுதந்­தி­ர­மாக விட்­டி­ருப்­ப­தா­லேயே அவர்கள் அர­சாங்­கத்­துக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களை தொடர்ந்து மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

மேலும் கடந்த காலத்தில் மேதி­னத்­துக்கு மக்­களை அழைத்துச் செல்­வ­தற்கு இலங்கை போக்­கு­வ­ரத்து சபையால் பெற்­றுக்­கொண்ட பஸ்­வண்­டி­க­ளுக்­கான கட்­டணம் இது­வரை செலுத்­தப்­ப­ட­வில்லை. ஆனால் இம்­முறை மேதி­னத்­துக்கு எந்த கட்­சிக்கும் இல­வ­ச­மாக பஸ் வண்­டிகள் கொடுக்கக் கூடாது என அர­சாங்கம் தெரி­வித்­தி­

ருந்­தது. இதன் ­கா­ர­ண­மாக இலங்கை போக்­கு­வ­ரத்து சபைக்கு 45 மில்­லியன் ரூபா லாபம் கிடைத்­துள்­ளது.

எனவே மஹிந்த ராஜபக் ஷ தனக்கு இரா­ணுவ பாது­காப்பு தேவை­யென்றால் நீதிமன்றத்தின் மூலம் அதனை பெற்றுக்கொள்ளவேண்டுமே தவிர அதனை சாட்டாகக் கொண்டு மஹிந்தவின் சகாக்கள் நாட்டுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாதுஅத்துடன் பொலிஸாரினால் பாது

காப்பு வழங்க முடியாவிட்டால் மாத்திரமே இராணுவத்தினர் பாதுகாப்புக்காக அழைக்கப்படுவார்கள். உலகில் எந்த தலை வருக்கும் இராணுவ பாதுகாப்பு வழங்கப் பட்டதில்லை என்றார்.
kesari
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -