அம்பாறையில் ஆர்ப்பாட்டம் - பெண்ணொருவரை தாக்க முற்பட்ட பிக்கு

முன்னாள் போராளிகள் கைதுசெய்யப்படுவதை கண்டித்து அம்பாறையில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை குழப்பும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

அம்பாறை பிரதேச செயலகத்திற்கு சென்ற ஆர்ப்பாட்டகாரர்கள், மாவட்ட அரச அதிபரிடம் மகஜர் கையளிக்க முற்பட்ட வேளையில், பிக்கு ஒருவர் உட்பட நான்கு பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்ணொருவரை தாக்க முற்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்று, தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதேவேளை, அம்பாறை மாவட்ட செயலகம் வரை சென்ற ஆர்ப்பாட்டகாரர்கள் வீதியில் வைத்து, பிரதி அரசாங்க அதிபரிடம் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகளை விடுவிக்குமாறு கோரி மகஜரொன்றை கையளித்துள்ளனர்.

இதன்பின்னர் குறித்த ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்து சென்றுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -