மஹிந்தவுக்கு சாதாரண பாதுகாப்பு போதும் – விஜயகலா மகேஸ்வரன்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்ததனால் எனது கணவர் மகேஸ்வரனுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு நீக்கப்பட்டது. இதனால் அவரது உயிர் பறிக்கப்பட்டது.

தற்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த சாதாரண பாராளுமன்ற உறுப்பினர் என்பதால் அவருக்கு சாதாரண பாதுகாப்பு போதுமானது என்று சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், மேலும் கூறியதாவது,

சாதாரண பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மட்டுமே பாதுகாப்புக்கு வழங்கப்படுகின்றனர். ஆனாலும் எமது நல்லாட்சி அரசாங்கம் அவருக்கான சகல வரப்பிரசாதங்களையும் வழங்குகிறது.

எனது கணவர் மகேஸ்வரன் 2007 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்ட விவாதத்தின்போது தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தார். பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இவ்வாறு அவர் குரலெழுப்பினார். இதனால் அவருக்கு இருந்த 16 பேர் கொண்ட பாதுகாப்பு முழுமையாக நீக்கப்பட்டது.

கடுமையாக தமது அரசாங்கத்தை விமர்சித்தார் என்பதனால்தான் அவரது உயிர் பறிக்கப்பட்டது. இவர்களது செயற்பாடுகள் இவ்வாறு அமைந்திருந்த போதிலும் எமது அரசாங்கம் பழிவாங்கும் செயற்பாடுகளில் ஈடுபடப் போவதில்லை எனவும் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -