அம்பாறையில் அமைச்சா் சஜிதினால் மக்களிடம் வீடுகள் கையளிப்பு (படங்கள்)















அஷ்ரப் ஏ சமத்-

வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சினால் நாடு முழுவதிலும் ஒவ்வொரு பிரதேச செயலாளா் பிரிவிலும் 200 எழுச்சிக் கிராமங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. 

அந்த வகையில் அம்பாறை நவம்கம்புரவில் 25 வீடுகளைக் கொண்ட 5வது உதாகம்மான தயா கம்மான எனப் பெயரிட்டு சென்ற 7ஆம் திகதி வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாசாவினால் மக்களிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் அமைச்சா் தயாகமகே பிரதியமைச்சா் அனோமகமகே வும் கலந்து கொண்டனா்

இங்கு உரையாற்றிய அமைச்சா் சஜித் பிரேமதாச; 

கடந்த மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் இலங்கையில் முதலிடுவதற்கு வரும் வெளிநாட்டு முதலீட்டாளாகள் மகிந்த சமாசத்திற்கு 20 வீதம் கமிசன் வழங்க வேண்டியிருந்தது. அதனால் வெளிநாட்டு முதலீட்டாளா்கள் இலங்கையில் அச்சம் கொண்டனா்.

அண்மையில் பிரதமா் ரணில் விக்கிரமசிங்கவுடன் சீனா நாட்டுக்கு நானும் அங்கு சென்று இருந்தேன். அங்கு உள்ள முதலீட்டாளாா்களையும் சீன அரசாங்கத்திடமும் பிரதமா் ரணில் விக்கிரமசிங்க தற்போதைய அரசு ஒருபோதும் முதலீட்டாளா்களிடம் 20 வீத கமிசம் வாங்காது. அந்த மகிந்த யுகம் யுகம் முடிந்து விட்டது. 

அம்பாறை திருகோணமலை தொட்டு இலங்கையில் உள்ள சகல மாவட்டங்களையும் எடுத்துக் கூறி உலகில் உள்ள முதலீட்டாளா்கள் முதலிட வருமாறும், அழைப்பு விடுத்திருந்தாா். அத்துடன் இலங்கையில் உள்ள மானித இயற்கை வளங்கள் மற்றும் வளங்களை பாவித்து இலங்கையை கட்டியெழுப்ப உதவுமாறும் வேண்டுகோள் விடுத்தாா். 

அம்பாறையில் அடுத்து வரும் 2 வருடத்திற்குள் 10 ஆயிரம் வீடுகளையாவது சாதி, மத, இன வேறுபாடுகளின்றி அமைப்பதற்கு எனது அமைச்சில் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளேன். அத்துடன் ஜீன் - 21 -ஜீன் 30ஆம் திகதி அம்பாறை மாவட்டத்தில் மேலும் 11 உதாகம்மான கிராமங்களுக்கு அடிக்கல் நடப்பட்டு நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கும் படியும் அம்பாரை மாவட்ட வீடமைப்பு முகாமையளாரை உத்தரவு பிறப்பித்துள்ளேன்.. 

அத்துடன் இன்று திறக்க்பட்ட வீடமைப்புக் கிரமாம் 5வது கிராமமாகும் அடுத்த கிழமை மட்டக்களப்பிலும், திருகோணமலையிலும் எழுச்சிக்கிராமங்கள் திறக்கப்பட உள்ளன. ஏற்கனவே முதலாவது கிராமம் முல்லைத்தீவிலும் 2, ஆம் 3 ஆம கிரமாம் ஹம்பாந்தோட்டை, 4 வது கிராமம் கண்டியிலும் திறந்து வைக்கப்பட்டுள்ளன. 

அம்பாறை மவாட்டத்தில் 33 ஆயிரம் குடும்பங்கள் வீடுகள் இல்லாமல் வாழ்கின்றதாக அரச அதிபரின் புள்ளிவிபரம் தெரிவிக்கின்றன. அதில் அடுத்த 4 ஆண்டுகளுக்குள் 23ஆயிரம் வீடுகளையாவது எனது அமைச்சின் ஊடாக நிர்மாணிக்கப்படும். அத்துடன் 300 வீடுகள் நிர்மாணிக்கப்படும். அம் மக்களது காணிகளை கடந்த அரசு கொள்லையடித்துள்ளது. 

கடந்த ஆண்டு ஆரம்பித்த 31 கிரமாம் நிர்மாணிக்கப்பட்டு உள்ளது. இவ் ஆண்டு 200 கிராமாங்கள் நிர்மாணிக்கப்படுகினற்ன. 

அத்துடன் அம்பாறையில் இன்று 300 குடுமபங்களுக்க வீட்டுக்கடன் வழங்கப்பட்டது. அத்துடன் இடை நடுவில் சீமெந்து புச முடியா த வீடுகளுக்கு சீமெந்து பக்கட்டுக்கள் வழங்கப்ட்டுள்ளன. அதே போன்று அம்பாறை வாழும் பொலிஸ், சிவில் பாதுகாப்பபு படையினா்களுக்கும் வீடுகள் நிர்மாணிக்க வீடமைப்புக் கடன் வழங்கப்படும். 

இந்த நாட்டில் உள்ள வீட்டுப் பிர்ச்சினைகளை 2020ஆம் ஆண்டில் சம்புரணமாக முழுமைப்படுத்தப்படும் எனவும் அமைச்சா் சஜித் பிரேமதசா அங்கு உரையாற்றினாா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -